Ad Widget

கட்டிட நிர்மாணத்துக்கு அனுமதி வழங்க விரைவு சேவைப்பிரிவு

jaffna_municipalயாழ். மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கான விரைவு அனுமதி வழங்கும் சேவைப்பிரிவு நேற்று திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமைய அந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிடங்கள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் முன்னைய காலத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும் என்பதுடன் விசேட கண்டனமும் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts