Ad Widget

கட்சியிலிருந்து நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன்: டெனீஸ்வரன்

சட்டத்துக்கு எதிராகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தினை நாடுவேன் என அமைச்சர் பா.டெனீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதற்கு மறுத்துள்ளமையால் பா.டெனீஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு இன்று (சனிக்கிழமை) ரெலோவின் உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கட்சியில் இருந்து டெனீஸ்வரன் நீக்கப்படுவது குறித்து வெளியாகியுள்ள நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே நேற்று (வெள்ளிக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

”ஜனநாயக செயற்பாடுகளுக்கு முரணான இரு வேறு நிலைப்பாடுகளுடன் கட்சி செயற்படுகின்றது. சட்டத்துக்கு மாறாகக் கட்சியிலிருந்து என்னை நீக்கினால் நீதிமன்றத்தை நாடுவேன்.

இருப்பினும் இன்னும் கட்சியில் ஜனநாயக விழுமியங்கள் இருப்பதாக நம்புகின்றேன்.

எனது பக்க நியாயங்களை நான் கட்சிக் கட்டுப்பாட்டை மீறவில்லை என்பதை கடந்த 12ஆம் திகதி நடந்த கூட்டத்தில் தெளிவாகவே கூறிவிட்டேன்” என வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Related Posts