மத்திய கிழக்கு பிராந்திய மோதல்களால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களைக் கடந்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் கட்டுப்படுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை இவ்வாறு உயர்ந்துள்ளது.
இதற்கமைய, கடந்த மே மாதத்திற்குப் பின்னர் இந்த விலை மட்டமானது பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.