Ad Widget

ஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை !!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்படும் நிலையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவு எட்டப்படும் என கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு குறித்து, கொரோனா தடுப்பு செயலணியின் அடுத்த கூட்டத்தில் மிகவும் பொருத்தமான முடிவு எட்டப்படும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

Related Posts