ஜெனிவாவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று முன்தினம்(30) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் செய்த் ராத் அல் ஹுசைனை சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் 32 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜெனிவாவுக்கு சென்றுள்ள அமைச்சர் ஆணையாளருடன் நடைபெற்ற சந்திப்பில் நாட்டில் நிலவும் மனித உரிமை நடவடிக்கைகள் குறித்தும் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.