Ad Widget

எழிலனின் மனைவியும் போட்டி!

Elilans-with-Wife-varudalநடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் கூட்மைப்பின் சார்பில் மூன்று பெண்கள் போட்டியிடவுள்ளனர்.

ஆவர்களில் இருவர் தமிழரசுக்கட்சியின் சார்பிலும் மற்றவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பிலும் போட்டியிடவுள்ளார்.

இதில் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலன் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.

36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 03 பெண்களும் உள்ளடங்குவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts