Ad Widget

எரிவாயு, அரிசி, சீனி, பால்மா, சீமெந்து தட்டுப்பாடு இருப்பது உண்மையே!! – அரசாங்கம்

அண்மைய நாட்களில் எரிவாயு, அரிசி, சீனி, பால்மா மற்றும் சீமெந்து தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்று நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தற்போது எரிவாயு, சீனி மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை எனவும், விலை உயர்வாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பால் மா மற்றும் சீமெந்து தொடர்பான பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த இரண்டு பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள அனைத்து வரிகளையும் நீக்கி பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக கூறினார்.

Related Posts