Ad Widget

எரிபொருளின்றி கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்திய மீனவர்கள் 4 பேர் படகுடன் யாழ். நெடுந்தீவு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கரையொதுங்கியதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த இம்மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர் தம்மிடம் ஒப்படைத்ததாகவும் இவர்களை இன்று திங்கட்கிழமை (29) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts