2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைத்த எனது கணவனும் மகனும் உயிருடன் இருக்கின்றார்கள்.
யாழ்.வலி,வடக்கு படைமுகாமில் அவர்கள் இராணுவ உடையில் நின்று கொண்டிருப்பதை தமிழ்வின் இணையத்தளம் புகைப்படமாக வெளியிட்டிருந்தது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
சண்முகநாதன் கௌரி என்ற குறித்த தாய் சாட்சியமளிக்கையில்,
2009ம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் முல்லைத்தீவு வட்டுவாகன் பகுதியில் வைத்து வைத்திலிங்கம் சண்முகநாதன்(கணவன்) சண்முகநாதன் உமையவன்(மகன்)ஆகியோரை படையினரிடம் ஒப்படைத்தோம்.
அதன் பின்னர் அவர்களை காணவில்லை. கணவன் மற்றும் மகன் ஆகியோரை படையினர் வாகனத்தில் கொண்டு சென்றதை நான் கண்டேன். எனினும் பின்னர் தொடர்பில்லை.
இந்நிலையில் வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மற்றும் படையினர் காணிகளை துப்புரவு செய்யும் செய்தியை தமிழ்வின் இணைத்தளம் வெளியிட்டிருந்தது.
அதில் எனது மகன் படையினரின் சீருடையுடன் படைமுகாமிற்குள் நின்று கொண்டிருக்கின்றான். அது என்னுடைய மகனே என குறித்த தாய் ஆணைக்குழு முன் பாக சாட்சியமளித்துள்ளார்.