Ad Widget

எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி தேர்தல் நடைபெறும்: தேர்தல் திணைக்களம்

mahinda-deshpriyaவடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்தே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாகா­ணத்தில் யாழ்ப்­பாணம் கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகா­ணத்தின் புத்­தளம் மற்றும் குரு­ணாகல் மாவட்டங்களிலும் மத்­திய மாகா­ணத்தில் நுவ­ரெ­லியா, கண்டி மற்றும் மாத்­தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.

வடக்கு, வடமேல் மற்றும் மத்­திய மாகாண சபை­க­ளுக்கு மொத்­த­மாக 142 உறுப்­பி­னர்­களை தெரிவு செய்யும் நோக்கில் 43 லட்­சத்து 58 ஆயி­ரத்து 261 பேர் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts