Ad Widget

எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது.

மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சனிக்கிழமை(09) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வது தொடர்பிலேயே இந்த பேச்சுவார்த்தையின் போது ஆராயப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts