அமைச்சர்கள் வசதிகளை பெற்றுக்கொண்டு வேலைச்செய்வதில்லை என்ற எண்ணமே மக்கள் மனதில் இன்னும் இருக்கின்றது. அந்த எண்ணத்தை ஆறு மாதங்களில் மாற்றுவோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.