Ad Widget

உருத்திரபுரத்தில் காணாமற்போன சிறுமியை கண்டுபிடிக்க மூன்றாவது நாளாகத் தேடுதல்!

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுகாடு பகுதியில் காணாமல்போன 3 வயது சிறுமியை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை நேற்றும் தொடர்ந்தது.

குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து கிராம மக்களும் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

missing-girl-uruthtirapuram

மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தேடுதல் நடவடிக்கையில், இதுவரை சிறுமி தொடர்பிலான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சிறுமி காணாமல் போன சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம், பெற்றோருடன் நீராடுவதற்காக வீட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று கொண்டிருந்த வேளை, குறித்த சிறுமியை ஒன்றுவிட்ட சகோதரனுடன் அனுப்பிவிட்டு பெற்றோர் நடந்து சென்றதாகவும், சிறுமியை ஏற்றிசென்ற 14 வயது சிறுவன் சிறுமியை விடுமாறு கூறிய இடத்தில் விட்டு வந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பெற்றோர் சென்று பார்த்த போது சிறுமியை காணவில்லை என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. எனினும், குறித்த சிறுமியை கண்டு பிடிக்கும் செயற்பாட்டில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், சிறுமியின் பெற்றோர், 14 வயது சிறுவன் உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts