இவ்வருடம் உயர்தர பரீட்சைக்காக தோற்றும் மாணவர்கள் இம்மாதம் 28ம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயர்தர பரீட்சைக்கான மாணவர்கள் கடந்த மாதம் 24ம் திகதியில் இருந்து தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க தொடங்கியுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபரினூடாக தமது விண்ணப்பங்களையும், தனிப்பட்ட ரீதியில் விண்ணப்பிப்போர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு தங்களது விண்ணப்பங்களை நேரடியாக கையளிப்பதனூடாகவும் விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.