Ad Widget

உ/த பரீட்சையில் அதிவிசேட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் அதிவிசேட புள்ளிகளைப் பெற்ற 20 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

DSCF9474

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டு அதிவிசேட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்ததுடன் காசோலை பரிசில்களையும் வழங்கினார்.

அத்துடன், வடமாகாண அரசதிணைக்களங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 98 சாரதிகளுக்கு நியமனக் கடிதங்களையும் இந்நிகழ்வின் போது வழங்கி வைத்தார்.

மற்றும் ஈச்சமோட்டை ஞானவைரவர் ஆலய பூசகருக்கு 50 ஆயிரம் ரூபா காசோலையையும் ஆலயத்திற்கு தேவையான தீபம் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கிவைத்தார்.

தொடர்புடைய செய்தி

வடமாகாணசபை சிறப்பாக செயலாற்றுகிறது – ஆளுநர்

Related Posts