Ad Widget

உடுவில் மக்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

NIcஉடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 4ஆம், 5ஆம் திகதிகளில் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

பப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல், உத்தேச வயதுச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் தொலைந்துபோன அடையாள அட்டைகளை பெற நடவடிக்கை எடுத்தல், பொலிஸ் முறைப்பாடு செய்தல், தேசிய அடையாள அட்டைகள் பழுதடைந்திருந்தால் மாற்றுதல் மற்றும் இதுவரை தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான ஆவணங்கள் அற்றவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல் சம்பந்தமாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

இதன்போது, கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள ஆட்பதிவுத் திணைக்கள, அதிகாரிகள் மற்றும் பொலிஸார் உட்பட பிரதேச செயலக அலுவலர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் பப்ரல் அமைப்பின் அலுவலர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Posts