யாழ்.கல்வியங்காட்டுச் சந்தியில் புதன்கிழமை (14) இரவு தனிமையில் நின்றிருந்த முதியவரை, இனந்தெரியாத சிலர் கடத்திச் சென்று செம்மணிப் பகுதியில் வைத்து, அவர் அணிந்திருந்த நகைகள், அலைபேசி என்பவற்றைப் பறித்த பின்னர், அவர் அணிந்திருந்த வேட்டியையும் அவிழ்த்துச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்திய போது, அவர் முகத்தில் இரசாயனப் பதார்த்தத்தை வீசியதால் அவர் நிலைதடுமாறிய நிலையில் வியாழக்கிழமை (15) வீடு சென்று சேர்ந்துள்ளார்.
தன்னைக் முதலில் துவிச்சக்கரவண்டியில் கடத்தியதாகக் கூறிய முதியவர், பின்னர் வானில் கடத்தியதாகக் கூறுவதால், தெளிவான வாக்குமூலத்தை முதியவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக பொலிஸார் கூறினர்.
முதியவர் தற்போது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.