Ad Widget

ஈழம் சிறிதாகிவிட்டது- மஹிந்த

வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இத்தேர்தலின் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும் தனக்கு ஆதரவு கிட்டியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts