தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பதிலும், தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்பதிலும், ஊழலற்ற நிர்வாகத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்பதிலும், இராணுவ வெளியேற்றப்படல் வேண்டும், சிங்கள பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கின்ற விடயங்களில் உறுதியாக செயற்படும் வடக்குமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை சிங்கள பௌத்த பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்து அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் சதி முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விக்னேஸ்வரன் அவர்கள் தமிழினத்துக்கு தலைமை தாங்க தாமதமின்றி முன்வர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு வலுச் சேரக்கவும் தமிழ் மக்கள் பேரவையினதும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் குறுகிய கால வேண்டுகோளை ஏற்று பல்லாயிரமாக அணிதிரண்ட எமது மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேற்படி போராட்டம் வெற்றிபெற ஒத்துழைத்த சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாரள்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி