Ad Widget

இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யுங்கள்! கேட்கிறார் சுரேஷ் எம்.பி.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

suresh

போதை மருந்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விடுதலையை வரவேற்ற அவர் இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் திகதி போதை மருந்து கடத்தினர் என்ற குற்றச்சாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 5 மீனவர்களையும் இலங்கையைச் சேர்ந்த 3 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்தது.

இவர்கள் அனைவருக்கும் அண்மையில் கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்திய அரசின் தலையீட்டால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பொது மன்னிப்பு வழங்கி நேற்றுப் புதன்கிழமை விடுதலை செய்தார்.

இந்நிலையில் இதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட 3 இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என சுரேஷ் எம்.பி கோரிக்கை விடுத்தார்.

Related Posts