டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை விரைவில் அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டொலர் விலை அதிகரிப்பு காரணமாக நாடு பெரும் பொருளாதார நெருக்கடியொன்றுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் எனவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.