கெற்பேலிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர். கெற்பேலிப் பகுதியில் வீதியால் சென்ற ஓட்டோவுடன் இராணுவ ட்ரக் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.
இந்த விபத்தில் கச்சாயைச் சேர்ந்த குமாரசாமி திவாகரன் (வயது 28) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
கொடிகாமத்தைச் சேர்ந்த கே.நிலக்சன் (வயது 21), கச்சாயைச் சேர்ந்தவர்களான உதயகுமார் இதேநிதன் (வயது 28), சிவகுமார் வின்சன் (வயது 19), எழுதுமட்டுவாளைச் சேர்ந்த சின்னத்தம்பி தபேந்திரன் (வயது 23) ஆகியோர் காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.