தேசிய இரத்த பரிமாற்ற மையம் இரத்த தானம் செய்யுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் சேமித்து வைத்துள்ள இரத்த அளவானது டெங்கு மற்றும் ஏனைய நோய்களால் குறைந்துள்ளதாகவும் அதனால் இரத்த தானம் செய்ய முன்வருமாறும் குறித்தமையத்தின் அத்தியட்சகர் டாக்டர்.ருக்ஷான் பெள்ளன தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து தெரிவிக்கையில்;
ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் இரத்த தானம் வழங்குவது குறைவு. இதனாலேயே இரத்தத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்திருந்தார்.
நாரஹேன்பிடிய தேசிய இரத்த பரிமாற்ற மையத்தினூடாக அல்லது அருகிலுள்ள வைத்தியசாலையின் இரத்த மையத்தில் இரத்த தானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்பொதுமக்களிடம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.