Ad Widget

இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை

யாழ்ப்பாணம், நாகர்கோவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவரை கடந்த 20ஆம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது கணவன் செவ்வாய்க்கிழமை (21) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் புதன்கிழமை (22) தெரிவித்தனர்.

கலியுகமூர்த்தி சுகந்தி (வயது 36) என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி, வீட்டிலிருந்து புறப்பட்ட மனைவி பருத்தித்துறையிலுள்ள நண்பி வீட்டுக்குச் சென்று வருவதாக சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென கணவன் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts