Ad Widget

இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு 98 ஆண்டுகள்: மக்கள் கொண்டாட்டம்

கிளிநொச்சி இரணைமடுக் குளம் உருவாக்கப்பட்டு நீர்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 98 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் இன்று (திங்கட்கிழமை) பொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு, இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், இரணைமடு விவசாய சம்மேளன விவசாயிகளால் பொங்கல் பொங்கப்பட்டு நன்றி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts