Ad Widget

இரணைத்தீவு மக்களின் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது

எதிர்வரும் புதன்கிழமை பாதுகாப்பு செயலகத்தில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இரணைத்தீவு விடயம் தொடர்பில் கலைந்துரையாடிய பின்னர் தீர்வுகளை வழங்குவதாக கிளிநொச்சி பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கூறியதை அடுத்து இரணைதீவு மக்கள் இன்று காலை 8 மணி முதல் முன்னெடுத்த வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

இதனால் மன்னார், யாழ் வீதியின் போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தடைபட்டதுடன், சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூநகரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பயன்கிட்டாத நிலையில் பிரதேச செயலாளர் வரவழைக்கப்பட்டார்.

இதன்போது சம்பவ இடத்தில் பொலிசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Posts