இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை சிறப்பு தடுப்பூசி வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் கூடுதலாக நான்கு கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தடுப்பூசி போடப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு 8 மணி வரை கோவிட்-19 தடுப்பூசி மையம் செயல்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.