Ad Widget

இன்று முதல் சிறப்பு தடுப்பூசி வாரம்

இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை சிறப்பு தடுப்பூசி வாரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் கூடுதலாக நான்கு கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தடுப்பூசி போடப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் இரவு 8 மணி வரை கோவிட்-19 தடுப்பூசி மையம் செயல்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Related Posts