Ad Widget

இன்று போய் நாளை வாருங்கள்: தமிழக மீனவர்களுக்கு நீதிமன்று தெரிவிப்பு

judgement_court_pinaiஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 25 பேரையும் நாளை ஆஜர்படுத்துமாறு யாழ்ப்பாண நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் மாதம் 6ம் திகதி 5 படகுகளில் சென்ற 25 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர்க்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை ஜூன் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts