Ad Widget

இன்று பலர் முன்னாள் போராளிகளை வைத்து அரசியல் செய்து வருகின்றனர் : தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள்

தமிழ் தேசிய ஜனநாயக போராளிகள் அமைப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சி பாரதி ஸ்டார் விடுதியில் மாலை 2 மணியளவில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் ஜனநாயக போராளிகள் கட்சியிலிருந்து பிரிந்தவர்கள் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இது குறித்து அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

”இன்று பலர் முன்னாள் போராளிகளை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் பல உதவிகளை பலர் தவறான வழிகளில் பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.

அண்மையில் கூட ஒரு முன்னாள் போராளிக்கென புலம்பெயர் நாடுகளில் இருந்து வந்த நிதியினை ஒருவர் தவறாகக் கையாண்டுள்ளார்.

உண்மையில் அவர் முன்னாள் போராளி அல்ல. தன்னை முன்னாள் போராளி எனக்கூறி மேற்படி சம்பவத்தில் தொடர்பு பட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுக்கப்படவேண்டும்.

மேலும் எமது அமைப்பின் மூலம் முன்னாள் போராளிகளின் கல்வி,பொருளாதாரம் உள்ளிட்ட நலன்கள் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts