தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்ற கொள்கையை வலிறுத்தி உயிர் தியாகம் செய்த தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களின் ஆத்மாக்களினால் இன்றும் அந்த கொள்கைகள் வலுவூட்டப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நடராஜா ரவிராஜ் உள்ளிட்ட பலரின் ஆத்மாக்களுக்கு நன்றியாக செயற்படுவதுடன் அவர்களின் இலட்சியத்திற்காக தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். நடராஜா ரவிராஜின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்ந நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மாவை சேனாதிராஜா, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் நடராஜா ரவிராஜின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.