Ad Widget

இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்

இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் வாரத்தை இன்று முள்ளிவாய்க்காலில் நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் இன்றில் இருந்து 18ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் என்று வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்றைய தினம் குறித்த நினைவேந்தலை ஆரம்பிக்கும் முகமாக நினைவுச் சுடரேற்றி ஆரம்பித்து வைத்தார் சிவாஜிலிங்கம்.

மேலும் குறித்த நினைவேந்தலில் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மேரி கமலா குணசீலன் ,வடமாகாண சபை உறுப்பினர் ரவீகரன் ஆகியோர் குறித்த நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.

Related Posts