Ad Widget

இந்திய மீனவர்கள் 25 பேரும் விடுதலை

judgement_court_pinaiஇந்திய மீனவர்கள் 25 பேரையும் ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. யாழ். நெடுந்தீவு கடற் பரப்பில் கடந்த மே 6ஆம் திகதி புதன்கிழமை கடற் படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி வழக்கு கடந்த மாதம் 19ஆம் திகதி யாழ். மேல் நிதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே. விஸ்வநாதன் 25 மீனவர்களையும் யூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எஸ். மகேந்திரராஜா 25 மீனவர்களையும் விடுதலை செய்தார்

Related Posts