Ad Widget

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக பலாலி மீனவர்களும் போராட்டத்தில்!

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள வடமராட்சி மீனவர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் முகமாக யாழ்ப்பாணம் – பலாலி, வலளாய் மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் குறித்த போராட்டத்தால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவுள்ள தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்களும் உயிரிழந்த மீனவர்களின் உறவுகளும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. காவல்துறை அதிகாரிகள் வீதியை மறிக்காது போராட்டத்தை மேற்கொள்ளுமாறு போராட்டக்காரர்களிடம் கோரிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts