Ad Widget

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம்

இந்திய அமைதிப்படையால் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது சுட்டுக்கொலை செய்யப்பட்ட வைத்தியசாலை பணியாளர்களின் 27ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று செவ்வாய்க்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது.

jaffna-hospital-staff

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகஸ்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68பேரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.

இன்றை அனுஷ்டிப்பு நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts