Ad Widget

இந்தியாவிலிருந்து வரும் மாசடைந்த காற்று நாட்டின் சில பகுதிகளில் மூடுபனி போன்று காணப்படும்!!

இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்று இலங்கையின் சில பகுதிகளில் மூடுபனியை போன்று காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வரும் மாசு அடைந்த காற்றானது, பண்டாரவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் மூடுபனியை ஏற்படுத்தியுள்ளது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

“புது டெல்லியில் இருந்து காற்று நீரோட்டங்கள் ஒரு வட்ட இயக்கத்தில் இயங்கி வருகிறது. அது டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவை நோக்கி பயணிக்கிறது. வங்காள விரிகுடாவில் இருந்து வளைந்து செல்லும் இந்த காற்று கிழக்கிலிருந்து இலங்கைக்குள் நுழைகிறது. இது இலங்கையைப் பாதிக்கிறது” என தெரிவித்துள்ளது.

“விரைவில் காற்றுடன் சிறிது ஈரப்பதம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இதன் விளைவாக சிறிதளவில் மழை பெய்யும். இதனால் மூடுபனி குறையும். இருப்பினும் இந்த மாத இறுதிக்குள் இந்தியாவில் இருந்து மேலும் காற்று நீரோட்டங்கள் வரும் என்று தெரிகிறது. தற்போது இலங்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை” என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் நுவரெலியாவில் வெப்பநிலை வீழ்ச்சியடையும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாண மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி வெப்பநிலை 6 பாகை செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில், கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், மன்னாரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாகவும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts