Ad Widget

இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தோர் யாழ் திரும்ப விருப்பம்

யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த 1 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுக்களின் தலைவர் லோர்ட் நெசபியிடம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த லண்டனின் இலங்கைக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுத் தலைவர் லோர்ட் நெசபி நேற்று (04) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 1 மணித்தியாலயங்கள் நீடித்த குறித்த சந்திப்பின் போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது நிலைமைகள் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆராய்ந்தார்.

அத்துடன், கல்வி, விவசாயம், சுகாதாரம், உட்பட மீள் குடியேற்றங்கள், இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் குறித்தும், விரிவாக ஆராய்ந்தார்.

அதன்போது, 1 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் இந்தியாவில் இருக்கின்றார்கள்.

தற்போது, இங்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதேவேளை, மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றதாகவும், அண்மையில் இந்தியாவில் இருந்து 900 குடும்பங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைகள் பற்றியும் எடுத்துக் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts