Ad Widget

இடம்பெயர வேண்டிய அச்சத்தில் மன்னார் மக்கள்!

மன்னாரின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் அடை மழை தொடர்ந்து நீடித்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னாரில் நேற்று (புதன்கிழமை) பெய்த அடை மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்கள் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம், ஜீவபுரம், ஜிம்ரோன் நகர், எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள வீடுகள், பாதைகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம்பெயர வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Related Posts