Ad Widget

ஆஸி. சென்றவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – அன்ரனி ஜெகநாதன்

antany-jekanathanஅவுஸ்ரேலியாவிற்கு அகதி அந்தஸ்துக்கோரி படகுமூலம் சென்றவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இலங்கையிலுள்ள அவுஸ்ரேலியா தூதரகத்தின் ஊடாக அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ளேன் என்று வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நேற்று நடைபெற்று முடிந்த பின்னர், ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘யுத்தம் நிறைவடைந்து நான்கு வருடங்களாகியும் இன்னும் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு வழங்கப்படவில்லை. இன்றும் மக்கள் தங்கள் வாழ்வை அச்சத்திலேயே கழிக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனால் இங்கு வாழும் இளைஞர், யுவதிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவிற்கு செல்கின்றார்கள். இவ்வாறு சென்றவர்களை திருப்பி அனுப்புவதற்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இவ்வாறு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளவர்களை திருப்பி அனுப்பவதை சர்வதேச நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் இளைஞர், யுவதிகளுக்கு ஆபத்துக்கள் உள்ளன என்பதை நான் அவுஸ்ரேலியா தூதரகம் ஊடாக அவுஸ்ரேலியா அரசாங்கத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts