அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் ஒரு தொகுதியினர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்த குறித்த புகலிடக் கோரிக்கையாளர் அவுஸ்ரேலிய குடியகல்வு குடிவரவு திணைக்களத்தினால் அரச விமானமொன்றின் மூலம் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த மார்ச் மாதம் 24 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுள்ள அவுஸ்ரேலியா, தமது நாட்டுக்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர் என எச்சரித்து வருகின்ற போதிலும், அந்நாட்டை நோக்கி புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்து பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.