Ad Widget

ஆவா குழுவைச் செர்ந்த மேலும் அறுவர் கைது

arrest_1சுன்னாகம் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் குழு மோதலில் ஈடுபட்ட ஆவாக் குழுவினர் என அடையாளங் காணப்பட்ட அறுவரை நேற்று(11) கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து சிறிய ஆயுதங்கள் (நக்கில்ஸ்) சிலவற்றையும் கைப்பற்றியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நலன்புரி முகாம் பகுதியில் இருகுழுக்களுக்கிடையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொகான் டயஸின் விசேட உத்தரவின் பேரில் பொலிஸ் குழு சம்பவத்துடன் தொடர்புபட்ட 6 பேரைக் கைது செய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அறுவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதுடன், அறுவரையும் இன்று (12) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts