Ad Widget

ஆவா குழுவிற்கு உணவு கொடுத்த பெண் கைது

arrest_1ஆவா குழுவில் இருந்த இளைஞன் ஒருவருக்கு உணவு கொடுத்த 24 வயதுடைய பிறவுண் வீதியினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த ஆவா (அதன் தலைவர் ஆவா வினோதன் உட்பட) குழுவைச் சேர்ந்த 13 பேர் ஜனவரி மாதம் 6ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

ஆவாக்குழவை சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டபோது, அந்தக் குழுவினைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உணவு கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதன்போது அவர் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட பெண் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், அப்பெண்ணை நேற்று கைதுசெய்ததாக தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆவாக்குழுவினர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களில் 8 பேரை நிபந்தனைகளில் அடிப்படையில் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார்; விடுதலை செய்தார்.

தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை (13) ஆவாக் குழுவின் தலைவரான ஆவா வினோதன் தவிர்ந்த ஏனைய இருவரும் தலா 5 இலட்சம் பெறுமதியான 3 ஆட்பிணையில்; செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் 13 பேரில் மற்ற இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts