ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள இயந்திர தகடு மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த இயந்திரத் தகடு மற்றும் பொற்காசு என்பற்றை அவர் திருடியுள்ளார் என பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.