Ad Widget

ஆலய களவுடன் தொடர்புடைய இருவருக்கும் விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் மேற்கொள்ளப்பட்ட களவு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

IMG_3717

யாழ்ப்பாணத்தில் உள்ள 13ஆலயங்களின் களவுடன் தொடர்புடைய இருவர் சுன்னாகப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று மல்லாகம் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.

அவர்களை விசாரணை செய்த நீதவான் இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றயவர் கொழும்பையும் சேர்ந்தவராவார் இவர்களிடம் இருந்து ஆலயத்தில் களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts