Ad Widget

ஆறு வருடங்களாக காணாமல் போயிருந்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் என்பவரின் குடும்பம் திரும்ப வந்தனர்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் கடந்த ஆறு வருடங்களாக காணாமல் போனார்கள் என்று அறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் யாழ்ப்பாணம் வரணியில் வைத்து இறக்கி விட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவராக இருந்த விநாயகம் என்பவர் வரணியை சொந்த இடமாகவும் பின்னர் வட்டக்கச்சியில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது. இவருக்கு மனைவி மற்றும் இரு பிள்ளைகள் இருந்துள்ளனர்.

காணாமல் போயிருந்தவர்கள் நேற்றைய தினம் இனந்தெரியாத சில நபர்களால் இவர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

இதனால் அங்கு நேற்றைய தினம் பெரும் பதற்றம் நிலவியதோடு ஆறு வருடங்களாக காணாமல் போனவர்கள் திடீரென வந்தமையால் ஆச்சரியமும் ஏற்பட்டது.

இதுவரை காலமும் விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் இரு பிள்ளைகள் கடற்படையினரின் தங்குமிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts