Ad Widget

ஆயுதங்களுடன் இந்தியாவுக்கு தப்பிச்சென்றவர்கள் மீது தாக்குதல்

இலங்கை கடற்பரப்பிலிருந்து இந்தியாவை நோக்கி ஆயுதங்களுடன் சென்ற இருவர் மீது, ராமேஷ்வரம் பகுதியில் வைத்து இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

எனினும் படகில் இருந்த இருவர், பதிலுக்கு கடலோர காவல்படையினர் மீது துப்பாக்கிப்பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்தேகநபர்கள் இலங்கையில் இருந்து தப்பிச் செல்வதாக இலங்கை கடற்படையினர் வழங்கிய தகவலையடுத்தே இந்திய கடலோர காவல்படையினர் படகின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

Related Posts