ஆயிரத்தை கடக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 545 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கான மேலும் 31 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 15 ஆயிரத்து 723 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Related Posts