Ad Widget

ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவன்

திருநெல்வேலி கெற்றப்போல் சந்தி பகுதியில் ஆசிரியையின் சங்கிலியை திருட முற்பட்ட மாணவனுடன் போராடிய ஆசிரியை தனது சங்கிலியை மீட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றதுடன், இந்த போராட்டத்தில் குறித்த ஆசிரியை காயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று காலை 7.45 மணியளவில் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில், சீருடை அணிந்த இளைஞன் ஒருவனும், வேறு ஒரு இளைஞனும் மோட்டார் சைக்கிளில் வந்து குறித்த ஆசிரியரின் சங்கிலியை அறுக்க முயன்றுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts