Ad Widget

ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு!

கோப்பாய் – கைதடி வீதியில் பாலத்தடியில் ஆசிரியர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Np HP-6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கனகரட்னம் கோணேஸ்வரன் (வயது 49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார்.

சாவகச்சேரி சகலகலாவள்ளி ஆரம்ப பாடசாலையின் ஆசிரியருமாவார்.

இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி விசாரணைகளில் தெரிவித்தார்.

சம்பவம் விபத்தா? அல்லது கொலையா? என்பது தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts