Ad Widget

ஆங்கிலம் சித்தியடைந்த இராணுவ அதிகாரிகள்

யாழ்.மாவட்ட இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 3 மாதகால ஆங்கில பயிற்சி நெறியில் சித்தியடைந்த 31 இராணுவ வீரர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி படைத்தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை (21) இடம்பெற்றது.

hh (1)

யாழ்.மாவட்ட படைகளின் கட்டளை தனபதி மேஜர் ஜெனரல் உதயபெரேராவின் வழிகாட்டலில் ஜூன் மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையில் இந்த ஆங்கில பயிற்சிநெறி நடைபெற்றது.

இந்த பயிற்சியில். ஆங்கில நாளிதழ்கள்களை படித்தல், ஆங்கில தொகைக்காட்சி அலைவரிசைகளை பார்த்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில், கட்டளை தளபதி, இலங்கை இராணுவ பொலிஸ் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நந்நதன உடவத்த, இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts