Ad Widget

அவுஸ்திரேலிய விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி

அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் 26 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் பயணம் செய்த கார் மரத்தில் மோதி சுமார் 80 மீற்றர் தூரத்துக்கு தூக்கி எறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய இளைஞரை பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Related Posts